நாட்களை சேமிக்கத்
தவறியோர்
நாட்காட்டிகளை
செமிப்பதாய் எங்கோ
படித்திருக்கிறேன்..
நானும் சேமித்தேன்
தமிழ் உள்ளம் ஒன்றை
என்னுள்..
முதியவனின் புதுத்துணைவியாய்..
என்னுள் சமைந்தவள்
முதலில் முனகினாள்..
பின் புலுங்கினாள்..
புலம்பினாள்..
கதறினாள்..
என் காதுகளினுள்ளே
கடப்பாறை கொண்டு உழுதாள்..
அழுதாள்..
என் மூளை நரம்புகளில்
தாண்டவம் அரங்கேற்றினாள்..
உடைந்தது என்னுள்ளம்..
இருந்தும் இன்னமும்
என் மழழைச் சிற்பியின்
நா உளியை
ஆங்கில கொச்சையிலேயே
வார்த்துக்கொண்டிருக்கிறேன்.
0 comments:
கருத்துரையிடுக