பிறந்ததும் பிரிந்ததேன்..

Labels: , , , , ,

உலகுக்கு உனைக் காட்ட..
உலகை உனக்குக் காட்ட..
கொணர்ந்தேன் உனை
என்னுடன்..
என்னில் நீயாய்..
பிறந்ததும் காணவில்லை..
தேடினேன் எங்கும்..
கண்டோர் வதனமெங்கும்
உன்னை நான் தேட..
என்னிலவர்கள்
உன்னை
த் தேட..

காணாமல் கதறினேன்..
காரணமறியா அப்புதியவர்களோ
காட்டினார்கள்
எதை எதையோ

என் உள்ளம் கனிய..
அப்பாமரர் செய்கையால்
கரைந்த
களைப்பையாற்ற
களிக்க..
நான் வேண்டுவது
அதுவென்றே
நினைந்து
நிறைந்தார்கள்
அவ்வருள்வறியோர்கள்..
கதறி களைத்திருந்தவன்
காணாமல் என்னைத்
தேடி வருவாயெனவே
பல நாள்
காத்திருந்தேன்..
வராமல் போகவே..
காலத்தின் கடனால்
உன்னைத் தேடுவதை
தொலைத்துவிட்டு..
புதியவனாய்
பிறந்த நான்
புரியாதவனாகிப்
போனேன்.
புரிந்தவனே
என்னைப் புரந்தவனே
புரியாததாய் நகைக்காதே
உன் நகைப்பில்
மீண்டும்
என்னைத் தொலைத்து
உன்னைத் தேட
நான் தயாரில்லை.

0 comments:

கருத்துரையிடுக