விதையாய் ஒரு நாள்

Labels:

விதையாய் ஒரு நாள்

விதைக்கப்பட்டேன்,

செடியாகி கொடியாகி

நிழல்தரும் மரமாகி

மலர் சொரியுமென்ற

நம்பிக்கையில்..

விதி செய்த சதியால்

பாசியாய் படர்ந்தேன்

வேசியாய் வாழ்வதிலும்

பாசியாய் வாழ்வது மேலென

அடங்கினேன் ஒடுங்கினேன்..

மீண்டும் மரம் படைக்கும்

எண்ணத்தில்

விதைத்தேன் ஒரு விதை..

சுதையில்லா சமூகத்திலொரு

சதை வாழ்க்கை..

என்று முடியுமோ

இந்த தொடர் வேட்கை..

கயிறுக்காக உயிரிழந்தாள் பத்தினி

Labels: , , ,

கயிறுக்காக

உயிரிழந்தாள் பத்தினி..

மயிருக்காக

மானமிழந்தான் நடிகன்..

கற்பனைக்காக்

கருவியிழந்தான் கவிஞன்..

விற்பனைக்காக

லாபமிழந்தான் வணிகன்..

பகுத்திருந்தும்

அறிவையிழந்தான் முன்கோபி..
படித்திருந்தும்

பாடம் மறந்தான் வேலையில்லா பட்டதாரி..

எல்லாமிருந்தும்

எல்லாம் மறந்தார் தெய்வ ஞானி..

உணர்வுக்கு

கரு கொடுத்தார் பொதுநலமி..

அக்கருவுக்கு

உரு கொடுத்தார் சுயநலமி..

மடமையை கொளுத்துவோம்

Labels: , , ,

ஆண்மைக்கும்

பெண்மைக்கும்

சான்றிதழாய்

சிறு சிசு.

ஆழத்தில்

ஆண்மைக்கே

வெற்றியாய் ஒரு

ஆரவாரம்..

பெண்மையின்

விசும்பல்

அனாதரவாய்.

மடமையை கொளுத்துவோம்

நூறு ரூபாய் காந்தி

Labels: , ,

சிந்தனையாய்
சிரிக்கிறேன்..
சில்லறைக்கு
சிரிப்பதாய்..
நடத்துனர்.

கவிதையின் பிரசவம்

Labels: , ,

நினைவுகளை

உயிரிலேற்றி

கனவுகளை

கருவாய்

தறித்து

பிரசவித்தேன்

ஒரு கவிதை..

விமர்சனமாய்

மீண்டும் அமைதி.