தி.க.வுக்கு ஒரு வார்த்தை..

Labels: , ,

தி.க.வுக்கு ஒரு வார்த்தை..
நேற்று படித்தது..
சூரிய கிரகண மூடத்தனத்தை
ஒழிக்க உணவுப் பந்தி..
அய்யா..
இது என்ன ஒரு மூட போராட்டம்
மூடநம்பிக்கையில்
மூடத்தை ஒழிக்க
உங்கள் பொன்நேரத்தை
செலவிடுதலை விடுத்து
நம்பிக்கையை விதைக்க
ஒரு முயற்சி செய்யலாமே..
எனக்கு தி.க தெரியாது,
தி.மு.க தெரியாது,
அ.தி.மு.க தெரியாது
வேறு எந்த ‘க’வும் தெரியாது..
உண்மையல்லாதவையறிய
என் மனம் விரும்புவதில்லை..
அறியும் ஆவலில்
பாமரனாய் கேட்கிறேன்...
சொல்லுங்கள்..
எது உங்கள் கொள்கை
கடவுளில்லை என்பதா..
நாமே கடவுளென்பதா..
சம்பிரதாய
சடங்குகளில்லையென்பதா..
என் வரலாறு
உதிக்குமுன்பே
உங்கள்
கட்சியும் கொள்கையும்
மூப்பை நெருங்கியதாய்
கேள்வியுருகிறேன்..
நீங்கள் கண்ட
பல காட்சிகள்
என் கருவறை
சுவரைக் கூட
தொட்டதில்லை..
இருந்தும் கேட்கிறேன்..
என்னால் நன்றாக
பார்க்க முடிகிறதென்கிறேன்..
நீங்கள் இல்லையென்கிறீர்கள்..
குருடாக இருக்கும் வரை
உங்களுக்கு
எப்படித்தெரியும்
என்னால்
பார்க்க முடிகிறதா
இல்லையாவென்று..
நான்
குருடனாயிருந்தாலும் கூட..
கடமையே கண் என
பகவத்கீதையுரைக்கிறது..
அய்யோ
கடவுளென்று எதுவுமில்லையென்று
இக்கூற்றை பொய்யாக்க
எதுவுமே செய்யாமல்
வெறும்சதையாய் வாழப்போகிறீர்களா..
பகுத்தறிவுப் பேதைகளே
வாதிப்பதை நிறுத்திவிட்டு..
உங்கள் கொள்கைகளை
காலத்திற்கேற்ப
களையெடுங்கள்..
தவறெனில்
பெரியாரின் நியமமாயினும்
தயங்காமல் களைந்தெரியுங்கள்..
உங்களுக்காகயில்லாவிடிலும்
எதிர்வரும் சீரான சமுதாயத்திற்காயினும்..
புரிதலில் இவ்வுலகம் மலரட்டும்..

0 comments:

கருத்துரையிடுக