கயிறுக்காக உயிரிழந்தாள் பத்தினி

Labels: , , ,

கயிறுக்காக

உயிரிழந்தாள் பத்தினி..

மயிருக்காக

மானமிழந்தான் நடிகன்..

கற்பனைக்காக்

கருவியிழந்தான் கவிஞன்..

விற்பனைக்காக

லாபமிழந்தான் வணிகன்..

பகுத்திருந்தும்

அறிவையிழந்தான் முன்கோபி..
படித்திருந்தும்

பாடம் மறந்தான் வேலையில்லா பட்டதாரி..

எல்லாமிருந்தும்

எல்லாம் மறந்தார் தெய்வ ஞானி..

உணர்வுக்கு

கரு கொடுத்தார் பொதுநலமி..

அக்கருவுக்கு

உரு கொடுத்தார் சுயநலமி..

0 comments:

கருத்துரையிடுக