தாய்

Labels: ,

என்

உயிர்த்தாய் கருவில் தோன்றி

மொழித்தாய் முதுகில் ஏறி

கல்வித்தாய் பாதம் பணிந்து

செல்வத்தாய் சுகத்தில் ஒளிர்ந்து

கன்னித்தாய் எஞ்செல்வம் ஈன

மங்கலத்தாய் எந்துணைப் பேண

கடல்த்தாய் கரங்களில் சாய்ந்து

பூமித்தாய் மடியில் ஓய்ந்தேன்..

0 comments:

கருத்துரையிடுக