கனவிலிருந்து ஒரு கவிதை
நினைவிற்கு கொண்டுவர
உயிரெழுத்துக்களை காணவில்லை
தேடச்சென்றோர் திரும்பவில்லை..
கண்ணீரின் கவிதை.. கரிப்பதோ!! சுவடுகளின் பாதையில்.. ஓர் சித்திரம்.
என்னுள்ளுக்கும் உள்ளிருக்கும் உள்ளே..
பல்லே.. பால் பொருளே..
உள்ளுணர்வுக்கும் எட்டாது
உயர வீற்றிருக்கும்
திருமுள்ளே..
என் உயிரின் கருப்புல்லே.. பூண்டே..
கற்பனைகளை கடந்துய்விக்கும் சொல்லே..
உணர்ந்தறியா..
உணர்வொன்றன்றியறியா
இவ்வறிய பாலகனை
கறையண்டாது காத்தருளும்
உயிர்வலிக்கொப்பான
உன் தெய்வதிருவடிக்கு
என்
சிரசமர்ப்பணம்.
0 comments:
கருத்துரையிடுக