விதையாய் ஒரு நாள்
விதைக்கப்பட்டேன்,
செடியாகி கொடியாகி
நிழல்தரும் மரமாகி
மலர் சொரியுமென்ற
நம்பிக்கையில்..
விதி செய்த சதியால்
பாசியாய் படர்ந்தேன்
வேசியாய் வாழ்வதிலும்
பாசியாய் வாழ்வது மேலென
அடங்கினேன் ஒடுங்கினேன்..
மீண்டும் மரம் படைக்கும்
எண்ணத்தில்
விதைத்தேன் ஒரு விதை..
சுதையில்லா சமூகத்திலொரு
சதை வாழ்க்கை..
என்று முடியுமோ
இந்த தொடர் வேட்கை..